×

மணலி அருகே மாத்தூரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்


திருவொற்றியூர்: மணலி மண்டலம், 19வது வார்டுக்கு உட்பட்ட மாத்தூர் சீனிவாச நகரில் சாலமன் என்பவர் தனது வீட்டு அருகில் உள்ள மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து மதில்சுவர் கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பை தாங்களாக அகற்றிக் கொள்ள வேண்டும் என்று மணலி மண்டல அதிகாரிகள் சம்பந்தப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அவர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.

இதையடுத்து செயற்பொறியாளர் தேவேந்திரன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் நக்கீரன், உதவி பொறியாளர் மைதிலி ஆகியோர் போலீசாருடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேற்று வந்தனர். அங்கு மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மதில் சுவரை பாப்காட் இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.

The post மணலி அருகே மாத்தூரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Mathur ,Manali ,Tiruvottiyur ,Mathur Srinivasa Nagar ,19th Ward ,Mandal ,Salomon ,
× RELATED போச்சம்பள்ளி ஜி.ஹெச் அருகே விவசாய...